நாள் தோறும் வெய்யிலில் நின்று தோட்ட வேலை செய்து கஷ்ரப்படும் தந்தை… தந்தையின் வருமானம் போதாமல் கடைகளிற்கு பலகாரம் செய்து கொடுத்து, அடுப்பு வெக்கையில் தினமும் உருக்கிப் போய் இருக்கும் தாயின் முகமும்… தினசரி இடியப்பம் பிழிந்து பிழிந்து மரத்துப் போன அவளின் கையும்…
சின்னச் சின்ன ஆசைகளை நெஞ்சுக்குள்ளே சுமந்து கொண்டு, வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு வெறுமைப் பெருமூச்சு விட்டுக் கொண்டு… நாளும் வலம் வரும் இரண்டு தங்கைமார்… எல்லோரின் முகங்களும் அவள் கண் முன்னே காட்சிகளாய் தோன்றின.
“ம்… நான் வெளி நாட்டுக்குப் போனன் எண்டால் நானும் நல்லா வந்திடுவன். என்ர அப்பா, அம்மா, தங்கைமார் எல்லோரையும் சந்தோசமாக வாழ வைத்திடுவேன்”… என்ற எண்ணம் அவளுள் மெல்ல வேரூன்றிக் கொண்டது.
சாந்தியின் சம்மதம் கிடைத்ததும் பரமசிவமும் மாப் பிள்ளை வீட்டாருடன் தொடர்பு கொண்டு கல்யாண அலுவல்களைப் பேசி முடித்தார். நல்ல நாள் குறிக்கப் பட்டு… மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணையும் பார்த்து எல்லாம் பேசி முடிக்கப்பட்டன. பின்னர் பெண்ணின் போட்டோவும் வெளிநாட்டுக்கு மாப்பிள்ளையின் கைக்கு பறந்து போய்ச் சேர்ந்தது.
மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தொகைப் பணத்துக்காக… தம்மிடம் இருந்த வீட்டையும், தோட்டக் காணியையும் அடகு வைத்து… கொடுத்த வாக்கை ஒப்பேற்றி முடித்து… பெரிய நிம்மதிப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார் பரமசிவம்.
எல்லாமே சுமுகமான நிலையில் முடிவு பெற… இரு வீட்டார் சம்மதத்துடனும், மாப்பிள்ளையின் வேண்டு கோளுக்கிணங்கவும் வெளிநாட்டுக்கு பறப்பதற்காய் சாந்தி கொழும்புக்கு கூட்டி வரப்பட்டாள்.
பயண அலுவல்கள் துரிதகதியில் நடைபெறத் தொடங் கின. பயண அலுவல்களின் வசதிக்காக சாந்தியை கொழும்பில் தங்கி இருக்க வைத்தான் அரவிந். நாட்க ளும் நகர்ந்து கொண்டே சென்றன. தினசரி நேரம் தவறாமல் போன் எடுத்து தன் அன்பை பகிர்ந்து கொள்ளவும், தன் ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவன் ஒரு போதும் தயங்கவில்லை.
ஆசை ஆசையாய் தினமும் கொஞ்சிப் பேசி… நாளெல்லாம் மகிழ்வதைப் பார்த்தபோது… தனக்கும் நல்லதோர் கணவன் கிடைத்து விட்டதை எண்ணி சாந்தியும் சந்தோசப்பட்டு… கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.
தொடரும்…..
சின்னச் சின்ன ஆசைகளை நெஞ்சுக்குள்ளே சுமந்து கொண்டு, வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு வெறுமைப் பெருமூச்சு விட்டுக் கொண்டு… நாளும் வலம் வரும் இரண்டு தங்கைமார்… எல்லோரின் முகங்களும் அவள் கண் முன்னே காட்சிகளாய் தோன்றின.
“ம்… நான் வெளி நாட்டுக்குப் போனன் எண்டால் நானும் நல்லா வந்திடுவன். என்ர அப்பா, அம்மா, தங்கைமார் எல்லோரையும் சந்தோசமாக வாழ வைத்திடுவேன்”… என்ற எண்ணம் அவளுள் மெல்ல வேரூன்றிக் கொண்டது.
சாந்தியின் சம்மதம் கிடைத்ததும் பரமசிவமும் மாப் பிள்ளை வீட்டாருடன் தொடர்பு கொண்டு கல்யாண அலுவல்களைப் பேசி முடித்தார். நல்ல நாள் குறிக்கப் பட்டு… மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணையும் பார்த்து எல்லாம் பேசி முடிக்கப்பட்டன. பின்னர் பெண்ணின் போட்டோவும் வெளிநாட்டுக்கு மாப்பிள்ளையின் கைக்கு பறந்து போய்ச் சேர்ந்தது.
மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தொகைப் பணத்துக்காக… தம்மிடம் இருந்த வீட்டையும், தோட்டக் காணியையும் அடகு வைத்து… கொடுத்த வாக்கை ஒப்பேற்றி முடித்து… பெரிய நிம்மதிப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார் பரமசிவம்.
எல்லாமே சுமுகமான நிலையில் முடிவு பெற… இரு வீட்டார் சம்மதத்துடனும், மாப்பிள்ளையின் வேண்டு கோளுக்கிணங்கவும் வெளிநாட்டுக்கு பறப்பதற்காய் சாந்தி கொழும்புக்கு கூட்டி வரப்பட்டாள்.
பயண அலுவல்கள் துரிதகதியில் நடைபெறத் தொடங் கின. பயண அலுவல்களின் வசதிக்காக சாந்தியை கொழும்பில் தங்கி இருக்க வைத்தான் அரவிந். நாட்க ளும் நகர்ந்து கொண்டே சென்றன. தினசரி நேரம் தவறாமல் போன் எடுத்து தன் அன்பை பகிர்ந்து கொள்ளவும், தன் ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவன் ஒரு போதும் தயங்கவில்லை.
ஆசை ஆசையாய் தினமும் கொஞ்சிப் பேசி… நாளெல்லாம் மகிழ்வதைப் பார்த்தபோது… தனக்கும் நல்லதோர் கணவன் கிடைத்து விட்டதை எண்ணி சாந்தியும் சந்தோசப்பட்டு… கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.
தொடரும்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக