பக்கங்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கவிதை அல்ல..உனக்கான கடிதம்...

உனக்காக
நிறைய
பரிசு பொருட்கள்
வாங்கி தந்தேன்...
அதற்கு கணக்கு கூட
நான் பார்த்ததில்லை...
அந்த பரிசு
பொருள்களின் விலை
நீ அறியாமல் இருந்திருக்கலாம்...
தவறில்லை...
ஆனால்
அதில் வந்த
என் அன்பை கூட
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
அது ஏனோ?.....

உன்னை வெறுத்தோ ...
கோபப்பட்டோ
நான் இந்த
முடிவை சொல்லவில்லை ...

உனக்காக
நான் எழுதி
அனுப்பிய கவிதைகளை
அனுப்பி வைக்கவும்...
நான் ஏமாந்து போன காதலை
புத்தகமாய் மாற்றி
உன்னை
இந்த உலகுக்கு
உயர்வாய் காட்ட
ஆசைபாடுகிறேன்...

உனக்காய்
நான் அனுப்பிய
பரிசு பொருள்களை
அனுப்ப முடியாமல் போனால்
பரவாயில்லை...
அதற்கான தொகையை சொல்கிறேன்
அதை அனுப்பி வைக்கவும்...
இங்கே
ஒரே வேலை உணவிற்காய்
பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு
ஒரு நாள்
உணவாவது பரிமாற ஆசை...
நான் செய்த பாவ மூட்டைகளை
கொஞ்சம்
இறக்கி வைக்க ஆசை...

உனக்காக
நான் அனுப்பிய துணிமணிகளை
அனுப்பி வைக்கவும் .
இங்கே
உடம்பை மறைக்க
துணி இல்லாமல்
தவிக்கும் ஏழை பெண்களுக்கு
தர ஆசைபடுகிறேன்...

நான் தொடங்கிய காதலை
நான் அப்படியே விட்டு
செல்ல விரும்பவில்லை...
உலகில் சிறந்ததாய் மாற்றி காட்டுகிறேன்
அப்போதாவது புரியும்
நீ இழந்த என் காதல்........

திங்கள், 13 செப்டம்பர், 2010

உன் மேல் சந்தேகம்...

நீ
சுதந்திரமாய் இரு...
உலகில்
உன்னால்
என்ன என்ன சுகம்
அனுபவிக்க முடியுமோ
அனுபவித்து கொள்...
உனக்கு
பிடித்த படி எல்லாம்
முழுதாய் வாழ்ந்து கொள்...

உன் மேல் சந்தேகம் என்ற
ஒன்று
என்றும்
எனக்கு வராது...
ஏன் என்றால்
உன்னோடு இருக்கும்
உயிர்
நானடி...

நமக்காக
நம் மேல்
உண்மையாய்
யாரும் இல்லையோ?..என்று
நமக்கு தோணும் போது தான்
இந்த வாழ்க்கை வெறுத்து போகும்...

உன் வாழ்க்கையில்
கவலை என்ற ஒன்று
வருவதை
என்னால் தங்கி கொள்ள முடியாது...

"தைரியமாய் இரு"...
உனக்காக யாரும் இல்லை
என்ற நிலை வரும் போது கூட
இங்கே
நான் உனக்காக
காத்திருப்பேன் என்பதை
மறந்து விடாதே...
வற்றாத அன்போடு
என் ஆயுள்
உள்ள வரை....

"என் மேல்
இத்தனை அன்பா"?...என்று
நீ கேட்கும் போது லேசாய் வலிக்குதடி....
என் அன்பின் ஆழம்
இன்னும் உனக்கு புரியவில்லையோ?என்று....

நான்
எதனை கொண்டு
நீருபிப்பது என்
உண்மை காதலை?!!!...

இதயம் கிழித்து காட்ட
நான்
தேவ தூதுவன் இல்லையடி...
உன்னை
உண்மையாய் நேசிக்கும்
சாதாரண மனிதனடி....

என் மனம் வலிக்குமடி...

நீ
என்னை ஏமாற்றுவது
தெரியாமலே இருந்து
ஒரு நாள்
தெரியும் போது தான்
வேதனை அதிகமாகி
என் மனம்
வலிக்குமடி...

இன்று
நீ என்னை
ஏமாற்றுவது தெரிந்தே
உன்னை
நேசிக்கும் போது தான் புரிகிறது...

உனக்கு புரியாத
என் காதல்
என் நேசம்
எத்தனை பெரிது என்று...

ஆனாலும்
நீ என்னை
ஏமாற்றும் போது
உன்னுள்
எத்தனை போராடி இருப்பாய்?...

உன் மனசாட்சி
உன்னை சுட்டிகாட்டும் போது
உன் அவஸ்தைகளில் கூட
என்னால்
நீ கஷ்டபடகூடாது...

ஏமாந்து
போவதை விட
ஏமாற்றும் போதே
வலிகள் அதிகம்...
நான் இஷ்ட பட்டே
காதலில்
உன்னிடம்
தோற்று போக தயார்...

ஒரு வேண்டுகோள்...
உன் புன்னகையை
மட்டும்
யாரிடமும் விற்று விடாதே
உன் புன்னகை
என் செல்வமடி.......

என் மனம் வலிக்குமடி...

நீ
என்னை ஏமாற்றுவது
தெரியாமலே இருந்து
ஒரு நாள்
தெரியும் போது தான்
வேதனை அதிகமாகி
என் மனம்
வலிக்குமடி...

இன்று
நீ என்னை
ஏமாற்றுவது தெரிந்தே
உன்னை
நேசிக்கும் போது தான் புரிகிறது...

உனக்கு புரியாத
என் காதல்
என் நேசம்
எத்தனை பெரிது என்று...

ஆனாலும்
நீ என்னை
ஏமாற்றும் போது
உன்னுள்
எத்தனை போராடி இருப்பாய்?...

உன் மனசாட்சி
உன்னை சுட்டிகாட்டும் போது
உன் அவஸ்தைகளில் கூட
என்னால்
நீ கஷ்டபடகூடாது...

ஏமாந்து
போவதை விட
ஏமாற்றும் போதே
வலிகள் அதிகம்...
நான் இஷ்ட பட்டே
காதலில்
உன்னிடம்
தோற்று போக தயார்...

ஒரு வேண்டுகோள்...
உன் புன்னகையை
மட்டும்
யாரிடமும் விற்று விடாதே
உன் புன்னகை
என் செல்வமடி.......

நட்பு......!!

நல்ல நட்பு தான்
பெரிய பகையாகவும் மாறுகிறது...
நண்பர்கள் தான்
பெரிதாய் மோதி கொள்கிறார்கள்...

நட்பில்
நம்மையும் மறந்து
நம்மை பற்றி
முழுதாய் சொல்லி விடுகிறோம்...
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல்...

நண்பர்களுக்குள்
மோதல் வரும் போது
ஒருவருக்கொருவர்
தங்களின்
குறைகளை சுட்டிகாட்டி பேசி
நட்பை
கொச்சை ஆக்கி விடுகிறார்கள்...

நட்பிற்கு
இலக்கணமும் இல்லை
இலக்கியமும் இல்லை...
நாமாக பேசி கொள்ளலாம்
உலகில் உயர்ந்தது நட்பென்று...
நடைமுறையில்
நட்பால் பலியானவர்கள் அதிகம்...

ஆம்...
இங்கே
காலம் முழுதும்
பழி வாங்க அலைகிறார்கள்
நல்ல நட்பாய்
பழகியவர்கள் மட்டுமே ...

காரணம்...

நட்பிடம்
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல் சொல்வதால் ...

நட்பு......!!

நல்ல நட்பு தான்
பெரிய பகையாகவும் மாறுகிறது...
நண்பர்கள் தான்
பெரிதாய் மோதி கொள்கிறார்கள்...

நட்பில்
நம்மையும் மறந்து
நம்மை பற்றி
முழுதாய் சொல்லி விடுகிறோம்...
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல்...

நண்பர்களுக்குள்
மோதல் வரும் போது
ஒருவருக்கொருவர்
தங்களின்
குறைகளை சுட்டிகாட்டி பேசி
நட்பை
கொச்சை ஆக்கி விடுகிறார்கள்...

நட்பிற்கு
இலக்கணமும் இல்லை
இலக்கியமும் இல்லை...
நாமாக பேசி கொள்ளலாம்
உலகில் உயர்ந்தது நட்பென்று...
நடைமுறையில்
நட்பால் பலியானவர்கள் அதிகம்...

ஆம்...
இங்கே
காலம் முழுதும்
பழி வாங்க அலைகிறார்கள்
நல்ல நட்பாய்
பழகியவர்கள் மட்டுமே ...

காரணம்...

நட்பிடம்
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல் சொல்வதால் ...

வியாழன், 9 செப்டம்பர், 2010

நம்பிக்கையில்

உனக்காக
உயில் ஒன்று
எழுதி வைத்திருக்கிறேன்...
நான் சொத்துகளாய் மதிக்கும்
நானும் நீயும்
பழகிய நாட்களை
பத்திரமாய்
உன் பெயரில்
என் இதயத்தில்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
என் இறப்பிற்கு
பின்
நீ
பெற்று கொள்வாய்
என்ற நம்பிக்கையில்....

முடிந்தால்

என்னை
அவளிடம் இருந்து பிரித்த
புறம் பேசு புண்ணியவான்களே...
முடிந்தால்
அவள் நினைவுகளை
என்னிடம் இருந்து
பிரித்து பாருங்கள்...

நாம் காதல்


என் கண்களில்
வியர்க்கும்
உன் நினைவுகளை
கொட்டி தீர்க்காமல்
இருக்க முடியவில்லை....

உன் கூந்தலில்
மலரும்
பூக்களுக்காய்
என் கல்லறை மட்டுமல்ல...
அதில் உறங்கும்
என் இதயமும் காத்திருகிறது....

நாம்
சுற்றி திரிந்த இடங்கள்
ஒவ்வொன்றையும்
பார்க்கும் போது
தொலைந்த உன் பாதம்
எங்காவது
தென்படுகிறதா என்று
என் பாதம்
என்னையே ஏங்கி பார்க்கிறது?!!!...

நோயினால்
நான் படுத்தால்
நோன்பு இருப்பவளே....
என் இறக்கும்தேதி
கேட்டவுடன்
உன் கண்களில் உதிரும்
அந்த கண்ணீரில் தானடி
கோடானகோடி ஆண்டுகள்
வாழும்
நம் காதல்...

உனக்காக
நான்
நல்ல கவிதைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
ஆம்...
அவை
"நீ என்னிடம்
பேசிய வார்த்தைகள்"....

பாசம்

நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அக்கா காத்திருக்க...
அக்கா முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
...தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
பாசம் உறங்காமல் காத்திருக்கும்!!!

பாசம்

நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அக்கா காத்திருக்க...
அக்கா முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
...தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
பாசம் உறங்காமல் காத்திருக்கும்!!!

புதன், 8 செப்டம்பர், 2010

வானத்திற்கு மட்டுமே

எத்தனையோ
நூற்றண்டுகளாகியும்
அப்படியே இருக்கும்
அந்த
வானத்திற்கு மட்டுமே
தெரியும்....
நாம்
எத்தனை முறை பிறந்து
எத்தனை முறை வாழ்ந்து
எத்தனை முறை இறந்து
மீண்டும் மீண்டும்
காதல் செய்கிறோம் என்பது....

ஏக்கம்

காதலித்து
ஒன்று சேர்ந்தவர்களுக்கு
காதல் சுகம்...

ஆனால்

பிரிந்தவர்களுக்கு
அது வலி...

"காதல்"
இந்த வார்த்தை
கேட்கும் போதெல்லாம்
நாம் கூட
காதலில் இணையாமல்
போய்விட்டத்தின்
ஏக்கம் மிஞ்சும்...

அந்த வலி
நிச்சயமாய்
சுகமாய் இருக்க முடியாது...
வலி...
வலி தான்...
நிறைவேறாத காதலில்
ஏக்கம்
தொடரத்தான் செய்கிறது....

தோற்று போகிறேன்

பொய் கலந்த
கவிதையே
நிலைக்கும் என்பார்கள்....
ஏனோ
எனக்கு
அப்படி கவிதைகள்
தோன்றவில்லையடி...

ஆம்...
பொய்யாய்
காதல் கூட செய்ய முடியாமல்
தோற்று போகிறேன்
நானே என்னிடம்...

துரத்தும் போது......

நட்பிற்கு
இங்கு சரியான
அங்கீகாரம் கிடைப்பதில்லை...
அதுவும்
ஆண் பெண், நட்பு
ரெம்பவே அவதிபடுகிறது...
என் நண்பன் என்றோ
என் தோழி என்றோ
அறிமுகபடுத்தும் அளவில்
நம் சமூகம்இன்னும் பக்குவபடவில்லை..
நாமும் பக்குவபடவில்லை...

நாம் செய்தால் நட்பு
அடுத்தவர் செய்தால்
அது அசிங்கமான தொடர்பு?...
கள்ள காதல் கூட
சுதந்திரமாய்
கடற்கரை சென்று சுவாசிக்கிறது...

நம்மில் உண்மையான நட்பு கூட
திருமண திருவிழாவில்
தொலைந்து தான் போகிறது...
நட்பு மட்டும்
ஏனோ
தனிமையில்
அழுகிறது தனியாய்...

நாமே
சில நேரம்
நம் வாழ்க்கைகாக
நட்பை தொலைக்க விரும்புகிறோம்...
நட்ப்பால்
என்ன செய்ய முடியும்?
துரத்தும் போது......

வானவில்

அவள் பார்வையில்
நான் காணும் புது உலகம்
அவள்
பாதையில் வானவில்கள் இன்னும்
வளையும் ............

அவள் விழி வீச்சிலே

கவிதைகள் எனது புத்தகம்
அவை தந்தது அழகு என்ற ஓர்
பெட்டகம்.............!!
அவள் விழி வீச்சிலே எந்தன் காலங்கள்
சற்று மாற்றினால் கிரகங்கள் ஆடுங்கள் ......
நவ கோலங்கள் இங்கு ஒன்றுதான்
இவளுடன் சேர்த்து அவை பத்துதான்
என் தலை சுற்றுதே ஓர் வட்டம் தான் .......

திங்கள், 6 செப்டம்பர், 2010

என் தோழி*


கடல் போன்ற
எனது நெஞ்சத்தில்
நட்பைத் தேடி ..

தத்தளிக்கும் எ‌ன்
மனக் கப்பலுக்கு
கலங்கரை விளக்கமாய்
எ‌ன் உயிர் தோழி நீ ........

என் இனிய தோழி

என் இனிய தோழி
என் பூமி
இன்பமாய் நனையும்
அழகிய மழை - நீ
என் வானம்
அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ
என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ
என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ
என் நெஞ்சை
இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ
என் இறுதி வரை
என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ
என்றும்
என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ